fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

சிகிச்சைக்காக பெங்களூரு வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!!

பெங்களூரு : துணை நிலை கவர்னர் இல்லத்தில் உள்ளிருப்பு பேராட்டம் நடத்தியதால் உடல் சுகவீனம் அடைந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்தார்.

டில்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

கவர்னரின் அறிவுறுத்தலின்படி கடந்த 19-ம் தேதி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

போராட்டத்தால் கெஜ்ரிவாலின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதால்  மேல் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்துள்ளார்.

சில நாட்கள் பெங்களூருவில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close