fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

அப்படி போடு…! பாகிஸ்தானை பார்த்து டிரம்ப் சொன்ன வார்த்தை…! ஐநா சப்போர்ட்!

America trump accuses Pakistan

நியூயார்க்:

பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவே பாகிஸ்தான் திகழ்வதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஐநா சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:  2019ம் ஆண்டு பிப்ரவரியில், காஷ்மீரில் புல்வாமாவில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், லஷ்கர் -இ – தொய்பா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்குப் பின், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது. சில பழமைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்கு எதிராகவும் கடுமை காட்டப்பட்டது.

ஆனாலும், நிலைமை மாறவில்லை. பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மதிக்க வேண்டும்.பயங்கரவாதம், உலகின் மிக பெரிய அச்சுறுத்தலாகும். அதை முறியடிக்க உலக நாடுகளும் ஒருங்கிணைய  வேண்டும் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close