பாஜகவில் இன்று இணைகிறார் சச்சின் பைலட்…? கவிழ்கிறதா ராஜஸ்தான் காங். அரசு…?
Sachin pilot may join BJP today
டெல்லி:
ராஜஸ்தானில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
சச்சின் பைலட் இன்று பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அவரை சமாதானப்படுத்த, மேலிட துாதர்களாக, அஜய் மகேன், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.
சச்சின் பைலட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: எனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது. ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில், இன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதில் நானும், என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
பாஜகவில் சிந்தியா சேர்ந்த போது, காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டும் விலகி, பாஜகவில் சேர உள்ளதாக தகவல்வெளியானது. இதை, சச்சின் பைலட் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. தற்போது சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று, பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.