GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
Tremors felt at Jharkhand and Karnataka today

டெல்லி:
ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது.

ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6:55 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் கர்நாடகாவின் ஹம்பியிலும் 4.0 ரிக்டர் அளவிலான லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.















