ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது…! ஹெச். ராஜா ஹேப்பி டுவிட்…!
H raja welcomes rs bjarati arrest
சென்னை:
ஆர்.எஸ். பாரதி கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
பிப். 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது.
அதேசமயம், ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் புகார் அளித்தார். அதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், சென்னையில் ஆலந்தூரில் உள்ள வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். இந்த கைது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. என்று கூறி உள்ளார்.