fbpx
REதமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர, கிராமப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார் .

மேலும் சலூன்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.(அது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.)

அதிலும் கையுறை அணிந்து முடி திருத்தவும், முகக்கவசங்கள் அணியவும், கடைகளில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close