ரிக்கி பாண்டிங்கை புகழ்ந்த ரிஷப் பந்த்(Rishabh Pant)
Risabh pant praises Ricky ponting!
டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தான் விரும்பியதை “செய்ய” சுதந்திரம் அளிப்பதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் நேர்காணலில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை புகழ்ந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் நான் களமிறங்கும் போது, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என எனக்கு ரிக்கி பாண்டிங் தனக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஐபிஎல் 2018 சீசனை தன்னால் அவ்வளவு எளிதில் முடியாது என்றும் கூறினார். அந்த ஐ.பி.எல் இல் பந்த் 14 போட்டிகளில் கலந்து கொண்டு, ஆறு அரைசதங்களுடன் 650 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தனக்கு முன்னாள் நட்சத்திரங்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ,எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற வீரர்கள் தனக்கு பெரிய அளவில் உதவியதாக பந்த் கூறினார்.
இதுவரை 13 டெஸ்ட், 16 ஒருநாள் மற்றும் 28 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள பந்த், டெல்லிக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.