RETamil Newsதமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு;பீலா பேட்டி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1075 லிருந்து 1173 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆகவும் , இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா பேட்டியளித்தார் .















