RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளை ஏற்ற வந்த ஆம்னி பேருந்து தீ விபத்துக்குள்ளானது .

சென்னை விமான நிலையத்தில் தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு முனையத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்ல வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீவிபத்து ஆம்னி பேருந்தின் மேல்புறம் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி இயந்திரத்தின் மூலம் தீப்பிடித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் பாதிப்பு பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.















