fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

8ல் இருந்து இப்போது 2…! இப்படி பண்ணீட்டிங்களே…! புலம்பும் ஆண்டவர்…!

Kamalhaasan condemns tamilnadu government

சென்னை: கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தை பிடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் நாளுக்கு நாள் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா,  தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டது. தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அவர் கூறி இருப்பதாவது: முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.

கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close