RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கேரளாவில் சாலை விபத்து – 5 தமிழர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் இருந்து கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்றது அதில் 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீடீரென வலையர் பகுதியில் கண்டைனர் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 3 குழந்தைகள் என 5 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பலியானவர்கள் தமிழர்கள் என அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.