RETamil NewsTrending Nowஇந்தியா
ஜம்முகாஷ்மீரை அதிர வைத்த நிலநடுக்கம்…! ரிக்டரில் 5.8 அளவாக பதிவு!
ஸ்ரீநகர்:
தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீரை தாக்கிய மூன்றாவது பூகம்பம் இது.
தஜிகிஸ்தானில் 100 கி.மீ ஆழத்தில் பூகம்பம் இருந்தது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர்.
ஜம்முவிலும் லேசான நடுக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது