fbpx
RETamil Newsதமிழ்நாடு

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு இன்று தொடக்கம் – வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது

நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பதிப்படைந்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

குறிப்பாக நாட்டின் முக்கியமான பகுதியாக உள்ள சென்னை, மும்பை, சூரத், ஹைதிராபாத்,அகமதாபாத்,தானே,ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்றானது அதிவேகமாக பரவி வருகின்றது.

நோய் தொற்று அதிக உள்ள பட்டியல்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ள நிலையில் , தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு சில மாவட்டங்களில் மிக அதிகமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் உள்ளது.

இவ்வாறு இந்த ஊரடங்கின் மூலமும் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு அடைப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

அதே போல் கொரோனா நோய் தொற்றில் அடுத்தபடியாக உள்ள சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 28-ஆம் தேதிவரை முழு ஊரடங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னற் இருந்த ஊரடங்கின் போது மதியம் 1 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்றும் , அதன் பிறகு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வந்தது.

தற்போது 3 மாநகராட்சிகளில் 4 நாட்களும், 2 மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் , கடைகளும் அடைக்கப்படும் என்பதால் , நேற்று சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்னையில் பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒருநாள் மட்டும் மத்திய 1 மணிவரை இருந்த ஊரடங்கு தளர்வு மதியம் 3 மணிவரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நேற்று முதல் பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

இன்று முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் 5 மாநகராட்சிகளிலும் , மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் உறுதி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் பத்திரிக்கைகள், டெலிவிஷன்கள் செய்தி தொடர்பான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைதவிர்த்து வீட்டை விட்டு வேறு பணிகளுக்காக யாரும் வெளியே வந்தால் , அவர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று தொடங்கியுள்ள இந்த முழு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் , அந்த 5 மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close