fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி..! தெலுங்கானா சோகம்!

3 year child death in borewell in telangana

ஐதராபாத்:

தெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேடக் மாவட்டம் பாப்பன்னபேட்டை என்ற பகுதியில் விவசாய நிலத்தில் கோவர்த்தன் என்பவர் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்துள்ளார்.  அந்த கிணறு மூடப்படவில்லை.

திறந்தே கிடந்த அதன் கிணறு அருகே நின்று கொண்டிருந்த சாய் வர்தன்  என்ற 3 வயது சிறுவன்  திடீரென உள்ளே விழுந்துள்ளான்.  சம்பவம் நடந்தபொழுது கோவர்த்தனின் குடும்பத்தினரும் அங்கே இருந்துள்ளனர்.

தகவல் அறிந்து ஆட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.  ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டி, 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணி நடந்தது.  சிறுவனுக்கு உதவியாக பிராணவாயு செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிய, சிறுவன் கிணற்றுள்ளே உயிரிழந்து விட்டான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close