fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

266 பேர் ஒரேநாளில் பலி..! கொரோனாவால் மகாராஷ்டிராவில் சோகம்!

266 corona dead in Maharashtra

மும்பை:

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது.

266 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,58,140 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1,14,648 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Tags

Related Articles

Back to top button
Close
Close