fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?

2 more dead due to corona in chennai

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதை கட்டுப்படுத்தும் பணிகள் ஒரு பக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்தவர்களில் 3 பேர் நேற்று பலியாகினர். இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார். அதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை நேற்று 40 ஆக உயர்ந்து இருந்தது.

இந் நிலையில் சென்னையில் இன்று கூடுதலாக 2 பெண்கள் பலியாகி உள்ளனர். சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார்.

அவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். இதேபோன்று வில்லிவாக்கத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அதனால், சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close