ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது–அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே, WHO, ICMR போன்ற சுகாதார நிறுவனங்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.கொரோனா பேரிடருக்கு பின்பு மிகப் பெரிய பாதிப்பை உலகம் சந்தித்து வரும் நிலையில்,அதற்கானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு மிகச் சிறப்பாக எடுத்து வருகிறது.அந்தவகையில்தமிழ்நாட்டில்இருதயநோய்சிகிச்சைகூறியபிரிவுகளின்கட்டமைப்புகளைமேம்படுத்துவதுஎன்பதுஎன்வகையில்பல்வேறுநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது.கிண்டி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு இருதய வடிகுழாய் ஆய்வகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல அரசு மதுரை ராஜாஜிமருத்துவமனையில்,இரண்டுஇருதயவடிகுழாய்ஆய்வகம்அமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், ஒரு இருதய வடிகுழாய் ஆய்வகம்அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் புதிதாக ஒரு இருதய வடி குழாய் ஆய்வகம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று ஏழாவதாக புதிய இருதய வடி குழாய் ஆய்வகம் ஒன்று ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மிக
விரைவில்கடலூர்,நீலகிரி,திருவள்ளூர்,திருவண்ணாமலை,ராமநாதபுரம்ஆகியஐந்துஇடங்களில்புதியஇதயவலிக்குழாய்வகம்அமைப்பதற்கானநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது.இதனுடைய பணி என்பது மாரடைப்பு சிகிச்சைகளில் மிக சிறப்பாக தனது பணியை செய்து வருகிறது, மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்குகேத்லாக் மூலம் அடைப்புகளை உடனடியாக அகற்றிரத்தஓட்டத்தைசீராக்கஇதுஉதவுகிறதுஅது மட்டுமல்லாமல் இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் , இதய நாள அடைப்புகளை அகற்றுவதற்கு இது பயனுள்ளதாக இருந்து வருகிறது. பல்வேறு வகைகளில் பயனுள்ள இந்த இதய வடிகுழாய் ஆய்வகம், சுமார் எட்டுகோடிரூபாய்மதிப்பீட்டில்ஆனது.இன்றுஓமந்தூரார்மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முன்பே இந்த மருத்துவமனையில் ஒரு இருதய வடிகுழாய்வகம் பயன்பாட்டில் இருந்தாலும், தினம்தோறும் 20 பேர் அதில் ப்ரசீஜர் செய்து கொள்ளும் நிலை இருந்துக் கொண்டு இருக்கிறது.எய்ம்ஸ் கட்டுமான பணி இருதயாக முடிவடைவதற்கு 2028 ஆம் ஆண்டு ஆகும் என்று ஜப்பான் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிடத்தை பார்க்காமலேயே ஒரு பேட்ச் மாணவர்கள் படித்து முடித்து வெளியே செல்ல இருக்கிறார்கள்.பறவைக் காய்ச்சல் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. பறவைகள் இறந்தால் 5 அடி ஆழத்தில் புதைக்கவும் , இறந்த கோழிகளை சமைக்கவ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.