fbpx
GeneralRETamil Newsதமிழ்நாடு

மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு!

2 more days’ lockdown extension in Madurai

மதுரை:

மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் சில நாட்களாக மதுரையிலும் முழு முடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றுடன் மதுரையில் முழுமுடக்கம் முடிந்தது. ஆனால் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close