fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!

14 Terrorist killed in border

டெல்லி:

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது, ரஜௌரி பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேபோல், மெந்தர் பகுதியில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவந்திபோராவில்  டிராலின் சைமோ பகுதியில் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சோயிமோ கிராமத்தில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து தாக்குதலில் இறங்கினர்.

இந்த தேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் பாக். திட்டம் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close