முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 3 மணி வரை கடைகள் இயக்கப்படும்
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு சில மாவட்டங்களில் மிக அதிகமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு இந்த ஊரடங்கின் மூலமும் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு அடைப்பு செய்யப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட சில நகராட்சிகளில் வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் முக்கியமாக மளிகை கடைகள் , இறைச்சி கடைகள் மற்றும் பேக்கரி போன்ற கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் பல இடங்களுக்கு முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்னையில் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சனிக்கிழமை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான இஸ்டலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்நிலையில் , சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் , சேலம் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்ட பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும் பறக்கும் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.