பெட்ரோல் ரூ.3.25, டீசல் ரூ.2.50 திடீர் விலை உயர்வு..! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Petrol, diesel price hike in tamilnadu
சென்னை: தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்புக்கு காரணமாக இருக்கிறது. அதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. இந் நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
விலை உயர்வுக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.