fbpx
RETamil Newsஇந்தியா

பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்; பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்.

மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டில்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு சேர்க்கப்பட்டார்.உடல் நல குறைவின் காரணமாக அங்கேயே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு குல்தீப் நய்யாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95 ஆகும்.

குல்தீப் நய்யார் பாகிஸ்தானில் பஞ்சாப் அருகே உள்ள சியால்கோட்டில் 1923-ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தார். முதலில் குல்தீப் நய்யார் உருது மொழி பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் எழுத்தாளராகவும் , அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மூத்த பத்திரிக்கையாளரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் மகாத்மா காந்தி , முகமது அலிஜின்னா மன்மோகன்சிங் என பல்வேறு தலைவர்கள் குல்தீப் கேள்விகளுக்கு பதில் அளிக்காதவர்களே இல்லை.கடந்த 70 ஆண்டுகளில் 14 மொழிகளில் 80 பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.இத்தகைய மூத்த பத்திரிக்கையாளருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close