fbpx
RETamil Newsசந்தை

இந்தியா வந்துள்ள ஜாவா பைக்ஸ்….எதிர்பார்க்காத அளவுக்கு புக்கிங்….மிரண்ட ‘க்ளாசிக் லெஜண்ட்ஸ்’ நிறுவனம் !

அதிக வரவேற்பை பெற்றுள்ள ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனத்தின் “ஜாவா பைக்குகள்” இந்தையாவில் கால்பதிக்க உள்ளது.

இப்பொழுதே விற்பனைக்கு உள்ள அனைத்து பைக்குகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி அடுத்த செப்டம்பர் மாதம் வரை “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனத்தின் “ஜாவா பைக்குகள்” புக்கிங் மற்றும் விற்பனைக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்துடன் இனைந்து “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனம் ஜாவா பைக்குகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாவா பைக்குகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் முதற்கட்டமாக புனேவில் புக்கிங் நடைபெறும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கான புக்கிங் தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது மூடப்பட உள்ளது.

நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு புக்கிங் நடந்துள்ளது. இது ஜாவா பைக் மீதான மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் மிரண்ட “க்ளாசிக் லெஜண்ட்ஸ்” நிறுவனம், “வாடிக்கையாளர்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி. புக்கிங் டிசம்பர் 25-ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.  இனி 2019 செப்டம்பரில் தான் அடுத்த புக்கிங் தொடங்கும்” என அறிவித்துள்ளது.

“க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனம், ஆன்லைன் புக்கிங் மூலமாகவே மொத்த பைக்கும் விற்பனை ஆனதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களை தற்போது டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close