தினத்தந்தி அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவரும் கல்வி , ஆன்மீக வளர்ச்சிக்கு பேரு உதவி புரிந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பெயர் பெற்றபா . சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு செங்குன்றம் அருகே உள்ள சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நாடார் சமூக நல பாதுகாப்பு சங்கத் தலைவர். சங்கரலிங்கம் செயலாளர். சண்முக சுந்தர பெருமாள் மற்றும் நிர்வாகிகள் செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலை கூட தலைவர். ஆர். முருகக்கனி, பா. வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.