இந்திய பிரதமர் மோடியும் – அமெரிக்க பிரதமர் டிரம்ப்பும் தொலைபேசி மூலம் திடீர் பேச்சுவார்த்தை !!
அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது , ஆப்கனிஸ்தான் பாதுகாப்பு , இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரியை அதிகரித்தது, போன்றவற்றால் ஏற்பட்ட இந்திய பற்றாக்குறையை களைவது, இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது போன்ற விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 2019-ஆம் ஆண்டிலும் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பணியாற்றி , இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய பிரதமர் மோடி ஆப்கனிஸ்தான் நூலகம் ஒன்றிற்கு நிதி அனுப்பியதை ,அமெரிக்க பிரதமர் டிரம்ப் கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.