fbpx
REஉலகம்

பிஜியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 8.2-ஆக பதிவானது !

இன்று பிஜி தீயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.19-க்கு ஆனதாக கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலின் அதிஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமிக்கு வாய்ப்பில்லை என்று யு.எஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 8-ஆக பதிவானது பின்னர் 8.2-ஆக அதிகரித்தது. இந்த நிலநடுக்கம் அதிஆழத்தில் ஏற்படவில்லையெனில் அதிக சேதத்தை அந்த இடத்தில் ஏற்படுத்தி இருக்கும்.

இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கு அப்படியிருக்கும்போது தற்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தோனேஷியாவில் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close