தேனி மாவட்டம்- போடிநாயக்கனூர்.–சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதி நிர்வாகிகள் துணை வட்டாட்சியரை தாக்கியதாக கூறி நட்சத்திர விடுதி முன்பு போடி நகர்மன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் செய்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது* .தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து மூணாறு செல்லும் பேசி நெடுஞ்சாலையில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது.இங்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு போடி வருவாய் துணை வட்டாட்சியர் குமரவேல் என்பவர் உணவகம் மற்றும் நடத்துவதற்குரிய உரிமை சான்றிதழ் கேட்கச் சென்றதாகவும் உரிய உரிமம் இல்லாததால் சான்றிதழ் கேட்ட துணை வட்டாட்சியரை உணவு விடுதி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கதவை அடைத்து விட்டு தகாத வார்த்தைகள் கூறி தள்ளிவிட்டதாகவும் கூறி துணை வட்டாட்சியர் குமரவேல் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் புகார் அளித்துள்ளார்.