வயது 15..! கொரோனா பாதிப்பு…! திடீர் மரணம்…! அதிரும் மருத்துவ உலகம்!
Youngman aged 15 dead due to corona
சென்னை:
சென்னையில் 15 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்த வயது உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் தற்போது 15 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
15 வயது சிறுவன் அரியவகை தசை சிதைவு நோயால் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி நிமோனியா காய்ச்சல் நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை இருந்ததால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.