RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சத்யபிரதா சாஹூ
மக்களவை தேர்தலில் சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 39 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடியவர்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது.
பணப்பட்டுவாடா குறித்து 1800 425 6669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார். இதேபோல் 94454 67707 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் தங்களது புகாரை பதிவு செய்யலாம் என சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.