fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்த முடியவில்லையா…? மின்வாரியம் தந்த புது சலுகை…!

TNEB announces time to pay bill

சென்னை: மின் கட்டணம் செலுத்த மே 22ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தாக்கம் குறையவில்லை. இந் நிலையில், தமிழகத்தில் மின் நுகர்வோர் வரும் மே மாதம் 22ம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை எந்த வித அபராதமும் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால்,  தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 18ம் தேதி பதில் அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close