fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று மட்டும் லட்சக்கணக்கானோருக்கு இ பாஸ் வினியோகம்…!

Tn epass 1.20 lakh

சென்னை:

இ பாஸ் எளிமையாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று லட்ச கணக்கில் இ பாஸ் வழங்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

எனவே, இ பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று முதல் இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அதாவது நேற்றைக்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இ பாஸ் இல்லாமல் வந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நேற்று நடைபெற்றது.

Tags

Related Articles

Back to top button
Close
Close