ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
Thirumazhisai vegetable market opened today
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் எதிரொலியாக அந்த சந்தை மூடப்பட்டது.
இதையடுத்து, காய்கறி மொத்த வியாபாரிகளுக்காக திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. இந் நிலையில் இன்று முதல் அந்த காய்கறி சந்தை தொடங்கியுள்ளது. ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
மொத்தம் 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் சந்தைக்கு முதல் நாளே 450 லாரிகளில் 6000 டன்கள் வரை காய்கறிகள் வந்துள்ளதாகவும், வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.