GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
Tamilnadu may reaches 1 lakh in October
சென்னை:
அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில் நாடு முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவித்து உள்ளது.
அக்டோபரில் தமிழகத்தில் கொரோனா தொற்று 1.38 லட்சமாக உயரும் என்று பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.