fbpx
ChennaiRETrending Nowதமிழ்நாடு

64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?

Tamilnadu corona causality reaches 49

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.  200 நாடுகளில் பசியாறி வருகிறது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து இயக்கங்களும் ஒட்டு மொத்தமாக முடங்கிவிட்டன.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் அனைத்து  நாடுகளும் திணறி வருகின்றன. இந்தியாவையும் விட்டு நகர மறுக்கும் கொரோனா வைரசஸ் உயிர்பலிகளை வாங்கி வருகிறது.

அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 17 தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் கொரோன தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டியும், பெரவள்ளூரை சேர்ந்த 67 வயது முதியவரும் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close