fbpx
Others

சிறந்த நீதித்துறைக்கு நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு….!

பெங்களூரு: 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நீதித்துறை என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூருவில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஒகா கலந்துகொண்டு பேசியதாவது:- நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் நீதித்துறையின் சாதனை பெரிய அளவில் கூறும்படி இல்லை என நான் நினைக்கிறேன். நாட்டின் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறை ஊழியர்கள் நிறைவேற்றி விட்டோமா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும். விடுதலை வீரர்களின் ஆசை நிறைவேறியதா, மக்களுக்கு விரைவான நீதி வழங்கப்பட்டதா என்றும் என நாம் சிந்திக்க வேண்டும். மக்களை நடுநிலையாக கொண்டு நாம் செயல்பட்டால் அடுத்த 25 ஆண்டுகளில் நாம் சாதனை நிகழ்த்தலாம். சிறந்த நீதித்துறைக்கு, நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.
சிறந்த நீதித்துறைக்கு நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு முக்கியமானது:சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு

Related Articles

Back to top button
Close
Close