fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கேரள விபத்தால் மிகுந்த மனவேதனை…! பிரதமர் மோடி டுவிட்!

PM modi concern about kerala flight accident

டெல்லி:

கேரள விமான விபத்து குறித்து மன வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஒரு விமானி, ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யுமாம் என்று தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் மலப்புரம்  ஆட்சியர்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விமான நிலையத்தில்  மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் மோடியிடம்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமான விபத்து குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி கேரள விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். என் எண்ணங்கள் யாவும்  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் உள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டுவரட்டும் .மேலும் இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசியதாக பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close