RETamil Newsதமிழ்நாடு
சென்னை மெரினாவில் ரோந்து பணிக்கு – ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை தொடக்கம்
காவல் துறையினருக்காக சென்னை மெரினாவில் ஸ்மார்ட் ரோந்து வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விதிமீறும் பெண் வாகனஓட்டிகளை பிடிக்கும் பெண் காவலர் தனிப்படை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனம் மற்றும் பெண் காவலர் தனிப்படை திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.