கமல்ஹாசன் எம்.பி–பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது….?
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 2005-ம் ஆண்டுகிராமப்புற வேலைவாய்ப்புக்காக ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தை நீக்கிவிட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் கிராமப்புறவேலைவாய்ப்பைபிணைக்கும்வகையில்,வளர்ச்சியடைந்த பாரத உத்தரவாத திட்டம் கொண்டுவரப்படுகிறது.இத்திட்டத்தில், வேலை நாட்கள் எண்ணிக்கை 100-ல் இருந்து 125 ஆக உயர்த்தப்படுகிறது.மகாத்மாகாந்திபெயரும்நீக்கப்பட்டு விக்சித் பாரத் ரோஜ்கர்-அஜீவிகா மிஷன் (கிராமின்) என மாற்றப்படுகிறது. இந்த மசோதா நடப்புநாடாளுமன்றகூட்டத்தொடரில்தாக்கல்செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டது.காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை.
நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ்நாடு அரசின் மீது சுமை கூடுகிறது.ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் குறைகிறது.அதைமீட்கவும்,காக்கவும்தான்நாம்முயற்சிசெய்யவேண்டும்.பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக மந்திரிகளின் தமிழகம் வருகை அவர்களுக்கு சாதகமாக அமையுமா என செய்தியாளர்கள்எழுப்பிய கேள்விக்கு “அதை நான் எப்படி சொல்ல முடியும்; மக்கள் தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.தொடர்ந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு “கண்டிப்பாக பிரசாரம் செய்வேன்” என்று கமல்ஹாசன் கூறினார்.