RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் 10 அடி ஆழம் கொண்டதாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட இயலாமல் பெரும் அவஸ்தை அடைந்தனர்.
இந்த பள்ளம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிவழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் பள்ளத்தை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.