சென்னையில் மழை – 27-ம் தேதி வரை பெய்ய கூடும் என தகவல்
காற்றின் மேலடுக்கு சூழற்ச்சி காரணமாகவும் , வெப்ப சலனம் காரணமாகவும் சென்னையில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் காரணமாக கேரளாவில் கனமழை பாய்ந்து வருகிறது. அதனால் இந்த மழையின் தாக்கம் கேரளா-தமிழக எல்லையிலும் தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாகவும், காற்றின் மேலடுக்கு சூழற்ச்சி காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சின்னக்கல்லாரில், தேவலா , வால்பாறை , பொன்னேரி, தாமரைப்பாக்கம் , பெரும்புதூர், பெரியாறு, செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மேலும் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகளான எழும்பூர், அண்ணாநகர், மேடவாக்கம், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், அண்ணாசாலை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று மலை முதல் தொடங்கிய மழை இடியுடன் இரவு வரை கனமழையாக பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெறிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் காற்றுசூழற்சி நீடித்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 27-ம் தேதி வரை மழை அல்லது கனமழை பைய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.