fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் – சிபிசிஐடி

பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

 

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வந்த கும்பல் போலீஸிடம் சிக்கியது.

இதுதொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி நேரில் வந்து புகார் அளிக்க விரும்புவோர்:

கோவை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம்
குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை
நெ.800, அவிநாசி ரோடு
கோயம்புத்தூர் – 18.

என்ற முகவரியில் நேரில் வந்து புகார்களை தெரிவிக்கலாம்.

வாட்ஸ்அப் வாயிலாக புகார் அளிக்க விரும்புவோர் 9488442993 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.

இது தொடர்பாக புகைப்படங்களையோ விடியோக்களையோ யாரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கோவை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close