fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியாகிறது…? பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

Plus 2 results on july 6th

சென்னை:

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 24ம் முடிந்த தேர்வுகளில் 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 10 நாட்களில் முடிக்கப்பட்டது.

மதிப்பெண் கணக்கீடு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. நாளையுடன் பணிகள் முடிந்து விடும் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.  ரேங்க் பட்டியல் எதுவும் கிடையாது. அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்படுகின்றன.

மாணவர்களே நேரடியாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும் மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் வெளியிட இருக்கிறார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close