GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
Parliament session date
டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இப்போது வழக்கமான இந்த கூட்டத்தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு பிறகு அனைத்து கூட்டங்கள், சந்திப்புகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தையும் அதுபோல நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.