இந்திய எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது என்ற இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்த நிகழ்வின் பின் அந்த பயங்கர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் , ஆக்ரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட் என்ற இடத்தில் நுழைந்து அந்த பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இந்தியாக்குள் நுழைந்த பாகிஸதான் விமானத்தினை இந்திய விமான படையானது விரட்டி அடித்தது.
இவ்வாறு தொடர்ந்த சம்பவத்தால் இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பூஞ்ச் மாவதத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.