சாத்தான்குளம் விவகாரம்…! தலைமறைவாக இருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன், முருகன் கைது…!
One more SI arrested on sathankulam case
தூத்துக்குடி:
எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட்டார். எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் வரும் 16-ம் தேதி ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார். எஸ்.ஐயான பாலகிருஷ்ணன் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளிவந்தது.
இந் நிலையில் திடீர் திருப்பமாக தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே தற்போது வரை சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கி இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு தலைமை காவலர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இருக்கின்றனர்.