எனது மதம் “மனிதநேயம்” – பாஜகவுக்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஹோலி பண்டிகை வருவதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானெர்ஜி கலந்துகொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது , எனது மதம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர் , அவ்வாறு கேள்வி எழுப்புபவர்களுக்கு எனது மதம் மனித நேயம் என கூற விரும்புகிறேன். மதம் பற்றிய மற்றவர்களின் கருத்து எனக்கு தேவையில்லை என கூறினார்.
மம்தா பானர்ஜி மதம் பற்றி பாஜகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதுடன், அவர் திருப்திப்படுத்தும் அரசியலை நடத்தி வருகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.
இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர் வங்காளத்தில் பூஜைகளை செய்ய நான் அனுமதிப்பதில்லை என பா.ஜ கவினர் என்னை நோக்கி கைகளை உயர்த்தி குறை கூற முயல்கின்றனர். இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என்று அவர்களே சென்று பார்க்கட்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் டோல்ஜாத்ரா மற்றும் ஹோலி பண்டிகையை மக்கள் தகுந்த கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்றும் , அந்த நாட்களில் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் எந்த முயற்சியில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.