fbpx
Tamil Newsஉணவு

சுவையான காளான் பிரியாணி!

செய்ய தேவையான பொருட்கள்:

காளான் 1/4 கிலோ
பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 2 நறுக்கியது
தக்காளி 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
கொத்தமல்லி 1/4 கப்
புதினா 1/4 கப்
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
நெய் 3 மேஜைக்கரண்டி
தேங்காய் பால் 1 கப்
தயிர் சிறிதளவு
எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் 1 கப்
உப்பு தேவையான அளவு
பிரியாணி இலை
ஏலக்காய்
லவங்கம்
கிராம்பு

செய்முறை:

முதலில் காளானை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பாசுமதி அரிசியை தண்ணீர் கொண்டு கழுவி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்துடன் உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் கொத்துமல்லி தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.

ஒரு கப் அரிசிக்கு 2 கப் (தண்ணீர் 1 கப்+தேங்காய் பால் 1 கப்) சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடையாமல் கிளறவும். சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அரிசி மலர்ந்து வரும் நிலையில் மிதமான தீயிட்டு விசில் போடாமல் குக்கரை மூட வேண்டும். 15 நிமிடம் ஆனதும் விசில் போட்டு அடுப்பினை ஆப்ஃ செய்யவேண்டும். 10-15 நிமிடம் ஆனதும் குக்கரை இறக்கி சுவையான காளான் பிரியாணியை ருசிக்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close