fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்

மீட்புப் பணியை விரிவுபடுத்தி நிதியுதவியை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்-மு.க ஸ்டாலின்!

MK Stalin tweet about Kerala landslide

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்க்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி என்னும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 80 தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். தற்பொழுது 29 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்” இதுவரை 29 உயிர்களை பறித்துள்ளது கேரளா நிலச்சரிவு சம்பவம்; இதில் சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள்; மீட்புப் பணிகளை விரிவுபடுத்தி ரூ.25 லட்சமாக நிதியுதவியை உயர்த்த வேண்டும்” என தனது கோரிக்கைகையை பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close