அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியல்..! திமுக மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்!
Minister rajendra balaji condemns stalin
சென்னை:
சாத்தான்குளம் மரணம் தொடர்பாக, தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது: போலீஸின் நடவடிக்கை மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தமிழக அரசு தவறிழைத்து? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? முதலமைச்சர் எங்கே முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது?
வழக்கமான குற்றவியல் சட்ட நடைமுறைதான் சாத்தான்குளம் வழக்கிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது. நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது என்றும் தெரிவித்து உள்ளார்.