fbpx
ChennaiGeneralTamil NewsTrending Nowதமிழ்நாடு

மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!

Minister pandiarajan condemns stalin

சென்னை:

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவ அதிமுக அரசின் செயல்பாடுகளே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி பேசி வருகிறார். இது குறித்து அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

எதிர்க்கட்சி தலைவர் மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்படுகிறார். மக்களிடம் குறைகளை கேட்டு வாங்கி அதிகாரிகளிடம் சேர்ப்பது போல இப்போதே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கொரோனா விவகாரத்தை வைத்து ஆட்சியை பிடிக்க அவர் முயற்சிக்கிறார் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close